நாட்டின் நிலை மட்டுமில்லாமல், உலகின் நிலையும் மிகவும் மோசமான நிலையை நோயினால் அடைந்துவிட்டது. மக்கள் நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ள காரணத்தினால், வரும் ஒவ்வொரு வைரசினாலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையை நாடி வருகின்றனர். மருத்துவர்களும் நோயாளிகளை குணப்படுத்த பெரிதும் முயன்று பலரை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றனர். மக்கள் தங்களது தவறுகளால் நோயாளி ஆகிக் கொண்டிருக்கின்றனர், இவர்களைப் காப்பாற்ற அறிவியல் படித்த மருத்துவ விஞ்ஞானிகள் பல மருந்துகளை கண்டுபிடித்தாலும் மற்றொரு பக்கம் உடனுக் உடன் உருவாகும் புதிய வைரஸ் கிருமிகளால் புதிய மருந்து தயாரிப்பதற்குள் பலர் வைரஸ் கிருமிக்கு பலி ஆகிவிடுகின்றனர்.
உணவின் மூலம்தான் பெரும்பான்மையான நோய்க்கான மூல கிரிமிகள் உருவாதற்கான அறிகுறியாக இர்ப்பதாக சந்தேகப்படுவதால், அனைவருக்கும் ஒரே உணவு, அதுவும் ஆரோக்கிய ஊட்டச்சத்து உணவு. அதனை மட்டும்தான் வாங்கி உண்ண வேண்டும். வேற எதனையும் உண்ணக்கூடாது.
நாமாக வாயைக் கட்டாவிட்டால், லாக்டவுன் போல, மவுத்லாக் வந்தாலும் வந்திடும் போலிருக்கிறது. இருந்தாலும் எதிர்காலம் யார் அறிவார்.
0 comments:
Post a Comment