ஐந்தாம் தமிழர் சங்கம் செயல்படத் தொடங்கி, சிறந்த கூட்டமைப்பை நோக்கிய பயணத்தினைத் தொடங்கிவிட்டது.
யாரோ ஒருவரோ என்ற நிலையினைத் தாண்டி, இவர்களா? என்ற நிலையினை எட்டிவிட்ட ஐந்தாம் தமிழர் சங்கம் பல உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டு, சிறந்த கருத்துக்களை தனது உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் கொடுத்துக் கொண்டிரிக்கிறது.
ஊரடங்கினால் கிடைக்கப் போகும் பலன் என்னவாக இருக்கும் என்ற சந்தேகத்தினை சில கருத்துக்களை கொண்டு ஐந்தாம் தமிழர் சங்கம் வெளியிடும் செய்திகள் பல ஏற்புடையவனாக இருக்கின்றன.
அறிவியல் என்ன கொடுத்ததோ, ஆனால் புதுமையை புகுத்தி, தெரியா அச்சத்தினை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகையால், ஆழம் தெரியாத குளத்தில் ஆழம் தேடும் வேலையினை தற்போதைய கடுமையான காலத்தில் விடுத்து, தெரிந்த குளத்தில் நீச்சல் பழகினால் நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் விரைவாக பலன் அடையலாம். ஆகையால், பழமையான மருத்துவமான பஞ்சபூத மருத்துவ கருத்துகளை படித்து பயன்படுத்தினால் ஆரோக்கியத்தினை வலுப்படுத்திக் கொள்ளலாம்.
0 comments:
Post a Comment