தமிழ் சினிமாவில், தனக்கென ஒரு தனி இடத்தை, பல ஆண்டுகளாக தக்க
வைத்திருந்தவர் சிம்ரன். நடிப்பு மட்டுமின்றி, நடனத்திலும் ஸ்பெஷலிஸ்டாக
இருந்த சிம்ரனின் இடுப்பு நடனத்தில், மயங்கி கிடந்த ரசிகர்கள்
ஏராளம்.அப்படிப்பட்ட சிம்ரன், திருமணத்திற்கு பின் விட்டுச் சென்ற காலி
இடத்தை, இதுவரை யாரும் கைப்பற்றாத நிலையில், இப்போது தன் இடத்துக்கு
தகுதியான நடிகை ஹன்சிகா தான் என, சிம்ரனே குறிப்பிட்டுள்ளார்.
"ஹன்சிகாவின் பளீர் அழகும், துறு துறுவென்ற நடிப்பும், என்னை ரொம்பவே
கவர்ந்துள்ளன என்றும் ன்சிகாவை பற்றி, புகழ் புராணம் வாசிக்கும் சிம்ரன்,
தற்போது, புதிதாக ஒரு, தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார். இதன் மூலம்,
சின்னத்திரைக்கு நடன நிகழ்ச்சியை தயாரிக்கும் சிம்ரன், விரைவில் ஹன்சிகாவை
வைத்து, படம் இயக்கவும் ஆர்வமாக உள்ளாராம்.
0 comments:
Post a Comment