மதுவிலக்கு அறிவிக்காத ஆளும்கட்சிக்கு முட்டை
குடும்பத்தினை சீரழிக்கும் மதுவினை ஓழிக்க வழிவகை எடுக்கத் தயங்கும் ஆளும்கட்சிக்கு, தாய்மார்கள் அனைவரும் எங்களது தாய்மையான விருப்பம் மதுவிலக்கு என்பதனை இலவசமாய் அள்ளிக் கொடுக்கும் ஆளும் அரசுக்கு பரிசாக முட்டை கொடுத்து நடவடிக்கை எடுக்க வையுங்கள்.
போராட்டம் செய்ய முடியாததை, உங்களது ஓட்டு செய்து முடிக்கும் என்பதனை இந்த தேர்தலில் நீங்கள் சரியாக செய்து காட்ட வேண்டிய தருணம் இது.
இந்த தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க 40 தொகுதியிலும் தோல்வியினைத் தழுவினால் தான், மீதம் இருக்கிற ஆண்டுகளில் மக்களுக்குப் பயந்து செயல்படும். இல்லாவிட்டால், மின்சாரத்திற்கு தீர்வு காண வக்கில்லாத அரசு, மக்களின் நீர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத திறனற்ற அரசு, நம்மை இலவசம் என்ற பிச்சை பொறுக்கியாக பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
மதுவிலக்கு அறிவிக்காத ஆளும்கட்சிக்கு முட்டை என்பதனை மனதில் கொள்ளுங்கள்.
குடிகாரர்களால் எத்தனை அவமானம் என்பதனை அனைவரும் மனதில் கொள்ளுங்கள்
குடிக்காதே என்று வீட்டில் உள்ளவர்களை திருத்த முடியாவிட்டாலும், குடிக்காதே என்றுச் சொல்லி வீட்டில் தினம் தினம் பிரச்சனையை வளர்ப்பதனை விட, குடிப்பதற்கு மதுவே இல்லாமல் செய்வதுதான் நமது புத்திசாலித்தனம். ஆகையால், தாய்மார்களே எந்தவொரு சூழலிலும் அ.தி.மு.க கட்சிச் சின்னமான இரட்டை இலைக்கு வாக்கு அளிக்காதீர்கள்.
இப்பொழுது நாளிதழ்களும் மக்களின் நலன் கருதி இந்த கருத்துக்களை மக்கள் முன் எடுத்துச் செல்கிறது என்பதனை அறிவதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனைப் போல் நீங்களும் உங்களால் முடிந்த அளவிற்கு ஆளும்கட்சிக்கு முட்டை கொடுக்க முயற்சியுங்கள்.
தனக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக பிறர் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கு என்ன என்று நினைக்கு இந்த மது வருவாய் பெரும் ஆளும் கட்சிக்கு நல்ல பாடத்தினை கொடுங்கள்.
செல்வ ஆதித்தன்.கு.
0 comments:
Post a Comment