ரூபாய் நோட்டு மீது குறிப்புகள் எழுதுவது என்பது சிலர்க்கான பழக்கமாக உள்ளது. இது இவர் கொடுத்த கட்டு என குறிப்புக்கு எஸ்கே, ராம் .. அல்லது நிறைய செல்வம் பெருக வேண்டும் என லட்சுமி என எழுதி வைக்கும் பழக்கம்... காதல் நோட்ஸ் கூட ரூபாய் நோட்டில் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இவ்வாறு ரூபாய் நோட்டில் எழுதினால் அது செல்லாமல் போய்விடும் என புரூடா விட்டுக்கிட்டு அழைகிற கூட்டம் அலையை விட வேகமாக அங்கும் இங்குமாய் வாட்சப்பில் அலைவதாக தகவல் மிடியாத் துறை வரைச் சென்று, அந்த செய்தி பற்றிய உண்மைத் தன்மையை பிரஸ் இன்பார்மேஷன் ப்ரூவ்க்கு ஒர் லெட்டர் போட்டு ரிப்லே வாங்கியிருக்காங்க..
அப்படியில்லாமல் ஏதும் இல்லை. ரூபாய் நோட்டினை பாதுகாப்பாகவும், அழுக்கில்லாமல், எழுதாமல் சுத்தமாக, நன்றாக வைத்திருங்கள் என்பதுதான் அட்வைஸ் ..
எழுதி அழுக்காகி.. கிழிந்து என பழையதாகிவிட்டால். வங்கியில் கொடுத்து புது நோட் வாங்கிக்கோங்க.. ஆனால், அதுக்குன்னு கொஞ்சம் மெனக்கெடனும்.
ஆகையால், நல்ல நோட்டை மட்டும் பார்த்து வாங்கிக் கொள்வது நல்லது.
0 comments:
Post a Comment